அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள சிந்தாமணிப்பிள்ளையாருக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்-அடுத்த சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டியிலிருந்து யுத்தகாலத்தில் மக்கள் வெளியேறிதற்குப் பின்னர் -இவ்வாலயம் பாழடைந்து காணப்பட்டதுடன்-சமூக விரோதிகளால்,ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் களவாடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.