மண்டைத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை, ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதாகவும் பொலிஸாரை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்று 28.08.2017 திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்யமுற்பட்டபோதே படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையில் உறவினர்கள் குவிந்துள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.