வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த பெருந்திருவிழா 25.06.2017 ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத்தினை கண்டு மகிழ ஆயிரக்கணக்கான பக்தர்கள்- இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்-புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் ஆலையத்திற்கு வந்திருந்ததாக தெரிய வருகின்றது.
பக்தர்களின் நலன்கருதி- யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நயினாதீவுக்கு விசேட போக்குவரத்துச் சேவையும் தனியார் பஸ் சேவையும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
நிழற்படங்கள்…செல்வன் ஜங்கரன் சிவசாந்தன்
வீடியோப் பதிவு-ஸ்ரீ அபிராமி வீடியோ-நயினாதீவு