அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 63வது பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 63வது பிறந்த நாள்-24-09-2013 செவ்வாய்க்கிழமை அன்றாகும்-சமூக ஆர்வலராகவும்-அதேநேரம் தமது கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் அனைத்திலும் முதல் ஆளாகவும் பங்குகொண்டு அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கு பாத்திரமான அவரை-அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் போதகர் அவர்களும் இணைந்து-யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்து மிகச்சிறப்பாக-மிக எழிமையாக அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அவரது இல்லத்தில் வைத்து கேக்கு வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்கள்.இவர்கள் அனைவருக்கும்-அல்லையூர் இணையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்தோடு பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் நோய்நொடியின்றி-எல்லாச் செல்வங்களும் பெற்று நீடூளி வாழ வேண்டும் என்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனை வேண்டுகின்றோம்.