பிரான்ஸ் பரிஸில் கடந்த 13.12.2016 அன்று காலமான-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பொன்னத்துரை ஜெயரட்ணம் அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி விஷேட திருப்பலிப்பூஜை 12.01.2017 வியாழக்கிழமை மாலை அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
அல்லைப்பிட்டி பங்குத் தந்தையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன்-அதனைத் தொடர்ந்து சிற்றுண்டி உபசாரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் மண்ணில் நோயினால் மூளைச்சாவடைந்த,ஜெயரட்ணம் அவர்களின் உடல் உறுப்புக்கள் அவரின் குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆறு பேருக்கு பொருத்தி உயிர் வாழ்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
எமது அல்லைப்பிட்டிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்து-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திலும் பின்னர் வேலணை மத்திய கல்லூரியிலும் சிறப்பாக கல்விபயின்று பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு இடம்பெயர்ந்து-அங்கு நீண்டகாலம் வசித்து வந்த நிலையில்-திடீர் என நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்த நிலையிலும்-தனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்கி-எமது கிராமத்திற்கு மேலும்பெருமை சேர்ந்த, அமரர் பொன்னத்துரை ஜெயரட்ணம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம்.