யாழ் தீவகம் அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் (திதி) 09.01.2017 திங்கட்கிழமை அன்று நினைவுகூரப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு- பரந்தன் தருமபுரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்ல முதியவர்களுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அன்னாரது உறவினர்களுடன் இணைந்து -அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!