லண்டனில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த,செல்வன் சிவகுருநாதன் நிர்மலநாதன் (நிர்மல்)அவர்களுக்கும்-செல்வி கிருஸ்ணகோபால் இளம்பிரியா (பிரியா) அவர்களுக்கும்-பெரியோர்களினால்,நிட்சயிக்கப்பட்ட திருமணம் 10.12.2016 சனிக்கிழமை அன்று லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் செல்வன் நிர்மலநாதன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் -கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த,மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
இச்சிறப்புணவு வழங்கிய நிகழ்வில்-மண்டைதீவிலிருந்து வருகை தந்த-செல்வன் நிர்மலநாதனின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.