இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் 21.11.2016 திங்கட்கிழமை அன்று-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கு திடீர் என விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களுடன் கிளிநொச்சிக்கான விஜயம் ஒன்றினை மேற் கொண்ட அவர் பின்னர்-மகாதேவா சிறுவர் இல்லத்திற்கு வருகை தந்ததாக மேலும் அறிய முடிகின்றது.
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் பணிப்பாளர் திரு தி.இராசநாயகம் அவர்களுடன் கலந்துரையாடி இல்ல நிலமைகளை கேட்டறிந்து கொண்ட திரு இரா சம்பந்தன் அவர்கள்-மதிய உணவினையும் மகாதேவா இல்லத்திலேயே முடித்துக் கொண்டு விடை பெற்றுச் சென்றார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.