யாழ் தீவகத்தில் சமூக விரோதிகளால்,ஈவிரக்கமற்ற முறையில் கால்நடைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருவதாக -ஆதாரத்துடன் எமது இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் திகதி மட்டும் வேலணைப் பகுதியில் ஏழு வரையான பசுமாடுகள் இறைச்சிக்காக கொல்லப்பட்டு-யாழ் குடாநாட்டுக்கு கடல் மார்க்கமாக கடத்தப்பட்டுள்ளதாக-வேலணையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அல்லைப்பிட்டி தெற்குப் பகுதியில் நேற்று முன் தினம் மாடு ஒன்றினை கொல்வதற்கு கத்தி வீசப்பட்டதாகவும்-படுகாயமடைந்த நிலையில் உரிமையாளரினால் காணப்பட்டு -பின்னர் கால்நடை வைத்தியர் வரவழைக்கப்பட்டு தையல் போடப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
கடந்த பல வருடங்களாக -சமூக விரோதிகளால்,ஈவிரக்கமற்ற வகையில் கால்நடைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்ற போதிலும்-இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட-அதிகாரிகள் கடுமையான நடைவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
அடுத்து வரும் காலங்களில்-தீவகத்தில் கால்நடைகள் முற்றாக அழிந்து விடக்கூடிய அபாயமான நிலை தோன்றியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.