வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கும் சிவன் முதியோர் இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதி 16.09.2016 வெள்ளிகிழமை காலை 10.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி புதிய கட்டிடமானது படுக்கையில் உள்ள முதியவர்களை பராமரிப்பதற்கென விசேடமாக அமைக்கபட்டதாகும்.
மேற்படி கட்டிடத்திறப்பு விழா காலை விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமாகி புதிய கட்டிட தொகுதியை திருமதி. நளாயினி இன்பராஜ் ( பணிப்பாளர் -வடமாகாண சமூகசேவைகள் திணைக்களம் ) அவர்களால் திறந்து வைக்கபட்டது.
தொடர்ந்து நிகழ்வுகள் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கும் அருளக சிறுமிகளின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து திரு.ஆ.நவரத்தினராசா அவர்களது தலைமையுரை இடம்பெற்றதுடன் தொடர்ந்து வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ் .எஸ். வாசன் அவர்களின் உரை,வவுனியா மாவட்ட முதியோர்சங்க தலைவர் Dr.K.இராமச்சந்திரன் அவர்களின் உரையும் அதனை தொடர்ந்து வவுனியா சட்டத்தரணி தயாபரன் அவர்களும் உரையாற்றினர் .
தொடர்ந்து பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட திருமதி திருமதி. நளாயினி இன்பராஜ் அவர்களது உரையும் இடம்பெற்றது .இறுதியில் வவுனியா கோவில்குளம் கோவிலின் பொருளாளர் திரு ஆ. உமாதேவன் அவர்களின் நன்றியுரையும் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் பிரதீபன் (கலாசார உத்தியோகத்தர் ),மா.சுரேந்திரன் (சமளங்குளம் கிராம சேவை உத்தியோகத்தர்) திருமதி.பிறேமினி விமலேந்திரன் (சமூக சேவை உத்தியோகத்தர்-நெடுங்கேணி) தனுஷா பாலேந்திரன்(மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ) பிரகாசினி அஜந்தன் (முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் )செல்வி .சோபனா (சமூகசேவை உத்தியோகத்தர் )திருமதி .யசோதரா தேவி (தொழிநுட்ப உத்தியோகத்தர் ) DR.சூரியகுமார்(சிதம்பரபுரம் வைத்தியசாலை ) ,Dr.சி.சிவதாஸ்(மனநல மருத்துவர் வவுனியா பொது வைத்தியசாலை ) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிழற்படங்கள்-தகவல்-வவுனியாவிலிருந்து…திரு கஜன்

IF