அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில், லண்டனில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த,கருணை உள்ளம் கொண்ட-திருமதி மதனராசா கேமலதா அவர்களினால்,புதுக்குடியிருப்பு கைவேலி எழுகை வீதியைச் சேர்ந்த,யுத்த அனர்த்தங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட-திருமதி பத்மநாதன் காளிப்பிள்ளை அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கோடு,50 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியுடைய,கறவை மாடு ஒன்று கன்றுடன் வழங்கப்பட்டதுடன்-
மேலும் பயனாளிக்கு, ஓரு தொகை பணமும் மதனராசா கேமலதா அவர்களினால் அவர்களினால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் லண்லனிலிருந்து வருகை தந்த திருமதி மதனராசா கேமலதா அவர்கள்-தமது மூன்று பிள்ளைகளுடன் கலந்து கொண்டதுடன்-மேலும் அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டார்.
அத்தோடு கிளிநொச்சி ஜெயந்தி நகாில் அமைந்துள்ள-மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 14.08.2016 ஞாயிறு அன்று இரவு சிறப்புணவும் வழங்கப்பட்டது.