யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் 08.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நினைவு கூரப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரின் புதல்வர்களின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-08.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் இல்லச் சிறுவர்களுக்கு பிரார்த்தனையுடன் கூடிய சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனை வேண்டி நிற்கின்றோம்.