யாழ் தீவகம் மண்கும்பானில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்-ஸ்ரீ முத்துமாரி (கறுப்பாத்தி) அம்மனை நாடி வரும் பக்தர்களின் பசி நிரந்தரமாக போக்கிடும் நோக்கோடு-அமைக்கப்பட்டு வந்த அன்னதான மண்டபத்தின் திறப்பு விழா 30.07.2016 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
மண்கும்பானைச் சேர்ந்த, திரு திருமதி செல்வரத்தினம் மற்றும் சரவணையைச் சேர்ந்த,திரு திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் நல்லாசியுடன்-திரு திருமதி திருவானந்தம் கார்த்திகா தம்பதியினரால்,நிர்மாணிக்கப்பட்ட-அன்னதான மண்டபமே திறந்து வைக்கப்பட்டதாகும்.
கறுப்பாத்தி அம்மனின் வருடாந்த ஆடிப்பூரத் திருவிழா வரும் 05.08.2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது-விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
புலம் பெயர்ந்து வாழும் மக்களின் ஆதரவுடன் ஆலயங்கள் தோறும்-அன்னதான மண்டபங்கள் அமைத்து-பக்தர்களுக்கு நிரந்தரமாக வயிறாற உணவு வழங்க வேண்டும்-என்பதே எமது விருப்பமும் கூட என்பதனை இச்சந்தர்ப்பத்தில் பதிவு செய்து கொள்கின்றோம்.