யாழ் தீவகம் மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 25.06.2016 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து விஷேட திருவிழாக்கள் தினமும் நடைபெற்று-03.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு எம்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
மண்டைதீவு முகப்பு வயல் முருகப்பெருமானின் தேர்த்திருவிழாவினைக் காண-மண்டைதீவிலிருந்தும்-வெளியிடங்களிலிருந்தும்-அதிகமான பக்தர்கள் வந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அனுசரணை….
மண்டைதீவு முகப்பு வயல் முருகப் பெருமானின் வருடாந்த தேர்த்திருவிழாவினை-நேர்த்தியாக,வீடியோப் பதிவு செய்து வெளியிடுமாறு-ஊர்பற்று மிக்கவரும்-ஆலயப்பணிகளுக்கு முன்னின்று உதவி வருபவருமாகிய,எமது அன்புக்குரிய திரு சி.ஜெயசிங்கம் (கனடா)அவர்களின் வேண்டுகோளின் பேரிலும்-நிதி அனுசரணையிலுமே-இப்பதிவு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.