யாழ் தீவகம் வேலணை கிழக்கு செட்டிபுலம் காளவாத்துறையில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்-அருள்மிகு ஸ்ரீ அரிகர புத்திர ஜயனாரின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 02.05.2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்ததுடன் 10.05.2016 செவ்வாய்க்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-11.5.2016 புதன்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
தீவகத்தில் புகழ்பெற்ற-வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் காளவாத்துறை ஜயனார் தீர்த்தமாடியதைக் காண் பக்தர்கள் பெருமளவில் திரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால்-பதிவு செய்யப்பட்ட தீர்த்தத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
அனுசரணை-திரு பொன்னுத்துரை தவராசா-(வேலணை செட்டிபுலம்-பிரான்ஸ்)