பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி சந்திரகுமார் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரன் திருநிறைச் செல்வன் கிருஷாந் அவர்களுக்கும்-புங்குடுதீவைச் சேர்ந்த,திரு-திருமதி சிவநாதன் அவர்களின் திருநிறைச் செல்வி ராயிசா அவர்களுக்கும்-கடந்த 10.02.2016 புதன்கிழமை அன்று பரிஸின் புறநகர் நகர் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக திருமண விழா நடைபெற்றது நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.
இத்திருமண விழாவினையடுத்து கடந்த 14.02.2016 ஞாயிறு (காதலர் தினம்)அன்று திருமண விருந்துபசார விழா-பரிஸில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமண விருந்துபசார விழாவில்-தமிழக விஜய் தொலைக்காட்சி புகழ் சுப்பர் சிங்கர் குழுவினரின் இசை நிகழ்சியுடன் மேலும் பிரஞ்சுக் கலைஞரின் மாயாஜால நிகழ்சி ஒன்றும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்றைய தினம் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-திருமண விருந்துபசார விழாவின் நிழற்படங்கள் சிலவற்றினை கீழே இணைத்துள்ளோம்-
திருமணவிழா மற்றும் திருமண விருந்துபசார விழா ஆகியவற்றின் முழுமையான வீடியோப் பதிவு பின்னர் இணைக்கப்படும்.