பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி சந்திரகுமார் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரன் திருநிறைச் செல்வன் கிருஷாந் அவர்களுக்கும்-புங்குடுதீவைச் சேர்ந்த,திரு-திருமதி சிவநாதன் அவர்களின் திருநிறைச் செல்வி ராயிசா அவர்களுக்கும்-கடந்த 10.02.2016 புதன்கிழமை அன்று பரிஸின் புறநகர் நகர் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக திருமண விழா நடைபெற்றது.
அன்றைய தினம் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-திருமண விழாவின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்-
இத்திருமணவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு பின்னர் இணைக்கப்படும்.
மணமக்கள் கிருஷாந்-ராயிசா அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதனை முன்னிட்டு-அன்றைய தினம்-தாயகத்தில் ஆதரவற்ற மாணவர்கள் தங்கி வாழும் மூன்று இல்லங்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இனிச்சபுளியடி முருகன்-சிந்தாமணிப்பிள்ளையார்-மூன்றுமுடி அம்மன் ஆகிய ஆலயங்களிலும் விஷேட பொங்கல் அபிஷேக வழிபாடுகளும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தீவக மக்களால் பெரிதும் விரும்பிப் பார்வையிடப்படுகின்ற-அல்லையூர் இணையம் இயங்குவதற்கான-முதற்காரணமாக இருந்து செயலாற்றுபவர்-மணமகன் கிருஷாந் என்பதனை நன்றியோடு அறியத்தருகின்றோம்.