தீவகத்தில் மண்டைதீவு-அல்லைப்பிட்டி-வேலணை மற்றும் இதர பகுதிகளில் விவசாயிகளினால் ஆர்வத்தோடு புகையிலைச் செய்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்பாேது தாேட்டங்களில் பாத்தி கட்டும் நிலைக்கு புகையிலை வளர்ந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இப்பகுதி விவசாயிகள் புகையிலைச் செய்கையினை மேற்கொளவதற்கு வேண்டிய பணத்தினை- இங்குள்ள வங்கிகள் சில விவசாயக்கடன் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கடன்கள் 6 மாத காலத்தில் வட்டியுடன் மீளவும் செகலுத்தப்பட வேண்டும் -என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் புகையிலை செய்கைக்கு முற்றாக தடை காெண்டுவரப்படவுள்ளதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.