தீவகம் மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவநாயகம் (நாகேந்திரம்)உத்தரியம் (நல்லம்மா)அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04.02.2016 வியாழன் அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றன. அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட அன்னாரின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பு பிலிப்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், தேவநாயகம் (நாகேந்திரம்)அவர்களின் அன்பு மனைவியும், அருமை(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வம், அன்ரன்(லண்டன்), அருள்(பிரான்ஸ்), வேதநாயகம்(இலங்கை), அனிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான மாகிறட், திரேசம்மா, அல்பிரட்ரம்மா, மற்றும் ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜீ, றீற்றா, வதனி, கிறேஸ், பிலோமினா, ஆனந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஞானம் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும், கிவின், பொலின், ஜொஸ்லின், மதுஷன், தனுஷன், தருசலா, டிலான், டிஜிவன், டனி, யுவானா, ஜெனினா, ஜெனிசியா, சதீஸ், காலஞ்சென்ற விஜிதா, சங்கீத், வினுஜன், விருதுஜன், அஸ்வின், யூலியன், யோனாத்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 04-02-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித பிலிப் நேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அல்லைப்பிட்டி சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
மகன்-அன்ரன் தேவா-லண்டன் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|