தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம் திகதி 17ம் திகதியுடன் நிறைவடைந்தது.
சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுவது வழமையாகும்.
இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான செவ்வாய்கிழமை முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.
யாழ் தீவகம் வேலணை வங்களாவடியில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் முருகன் கோவிலிலும் மிக உக்கிரமான சூரன் போர் இடம்பெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட- சூரன் போரின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.