கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் இரண்டு வயதுடைய சிறுமியான சுதர்சினியின் எதிர்கால நன்மை கருதி-மகாதேவா சுவாமிகள் ஆச்சிரமத்து நிர்வாகத்தின் அனுமதியுடன் -அல்லையூர் இணையம் 15 ஆயிரம் ரூபாக்களை முதற்கட்டமாக,சிறுமியின் பெயரில் இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிட்டுள்ளது.
இவ்வில்லத்தில் 408 மாணவ,மாணவிகள் தங்கியிருந்து கல்விகற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு தங்கியுள்ள மாணவ,மாணவிகளில் வயது குறைந்தவர் (2வயது)சுதர்சினியே ஆவார்.
கருணை உள்ளம் மிக்க நீங்களும் இம்மாணவர்களுக்கு உதவிட முன் வருவீர்கள் என நம்புகின்றோம்.