யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவக பிரதான வீதியினை- அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அதி உயர் தொழில் நுட்பத்துடன் கனரக இயந்திரங்களின் துணையுடன் வீதி அகலப்படுத்தப்படும் பணிகளில் தற்போது முக்கால் திட்டம் நிறைவடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இவ்வீதி அகலப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும்-முழுமையாக பணிகள் நிறைவடைய நீண்டகாலம் செல்லலாம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது யாழ் பண்ணையிலிருந்து-வேலணை அராலிச்சந்தியைத் தாண்டி காபட் வீதியின் முழுமையான பணிகள் நிறைவடைந்திருப்பதாக மேலும் தெரியவருகின்றது.
நிழற்படங்கள்-கோபி