யாழ். மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சபாபதிப்பிள்ளை அவர்கள் 23-09-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24.09.2015 வியாழக்கிழமை அன்று யாழ் திருநெல்லேியில் நடைபெற்றது. அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் முழுமையான வீடியோப்பதிவு-மற்றும் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், விசுவனாதி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், சபாபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், தவநாயகம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகரட்ணம், கனகலிங்கம்(கனடா), கணேசலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சர்வேஸ்வரி, பற்பராதேவி(யாழ்ப்பாணம்), இராஜேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும், செல்வராணி, சுலோசனா, பங்கி, நந்தினி, நிர்மலகாந்தன், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தவமணி அவர்களின் அன்பு மைத்துனியும், தவப்பிரியா தயானந்தன், ஜெயப்பிரியா சிவரூபன், கோபிநாத், முரளிதரன், மயூரன், கஜரூபன், ஜசிக்கா, லிங்கன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், ஜீவிதா, கீர்த்தனா ஜோன்சன், கிதுஷா, கபில்ராஜ், சர்மிளா கஜன், சந்துரு, சபேஷ் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும், தனுசியன், திகாசியன், துளசியன், வினுஷ்கா, அகல்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||
|