யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின்- இரண்டாம் தளத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகக்கடினமான,கலைவேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லினால் கீழ் தளத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து-மேற்கொண்டு கல்லினால் கட்டப்பட்ட முதலாவது தளத்தின் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது தளத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
யாழ் மாவட்டத்தில்- இப்படியானதொரு கலைவேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லினான ஏழுதள இராஜகோபுரம் இதுவரைக்கும் அமைக்கப்படவில்லை என்று-இதன் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வரும் பிரபல ஒப்பந்தக்காரரும்,சிப்பாச்சாரியாருமாகிய,திரு.காந்தரூபன் அவர்கள் எமது இணையத்திற்குத் நேரடியாகத் தெரிவித்தார்.