மண்டைதீவுக்குச் செல்லும் பிரதான வீதியில் நீண்ட காலமாக அமர்ந்திருந்து அருள்பாலித்து வந்த,வழிப்பிள்ளையார் ஆலய மூல விக்கிரகத்தினை-கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
விநாயகர் சதுர்த்தியை,முன்னிட்டு -வழிப்பிள்ளையாரை வணங்குவதற்குச் சென்ற பக்தர்கள் -மூல விக்கிரகத்தினை காணாது அதிர்ச்சியடைந்தனர்.
இதேபோல் முன்னரும் ஒருதடவை வழிப்பிள்ளையாரின் மூல விக்கிரகம் காணாமல் போயிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மண்டைதீவு வழிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில்-மண்டைதீவுச் சந்திப்பகுதியில் பொலிசாரும்,இராணுவத்தினரும் 24 மணிநேர பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
படங்கள்-திரு M.கஜந்