தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வந்ததுடன் 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும்,புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான முத்துமாரி அம்மனின் பக்தர்கள் இக்காட்சியினைக் கண்டு மகிழ்ந்தனர்.
புதிய பிள்ளையார் தேர் வெள்ளோட்டத்தின் நிழற்படங்கள் மேலேயும் அதற்குக் கீழே தேர்த்திருவிழாவின் வீடியோ பதிவு -நிழற்படப்பதிவு இணைக்கப்பட்டுள்ளன.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-தேர்த்திருவிழாவின் வீடியோப் பதிவு மற்றும் நிழற்படப்பதிவு என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வீடியோ மற்றும் நிழற்படங்களுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….