யாழ் தீவகம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 20.08.2015 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இம்முறை உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலிருந்தும், சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் முகமாக-பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு தினமும் வந்து வழிபட்டுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-தேர்த்திருவிழா மற்றும்எட்டாம் நாள் (27.08.2015) வியாழக்கிழமை அன்று நடைபெற்ற- திருவிழாக்களான,வேட்டை மற்றும் சப்பறம் ஆகியவற்றின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகரின் வருடாந்த தேர்த்திருவிழாவுக்கான அனுசரணையினை வழங்கியவர்கள்….
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகரின் எட்டாம் நாள் திருவிழாவின் உபயகாரர்-திரு சி.ஜெயசிங்கம் குடும்பத்தினர்(மண்டைதீவு-கனடா)
இத்திருவிழாக்களின் வீடியோப்பதிவிற்கான அனுசரணை வழங்கியவர்-திரு.சி.ஜெயசிங்கம் அவர்கள் (மண்டைதீவு-கனடா)