யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்- 13.08.2015 வியாழக்கிழமை அன்று முருகப்பெருமான்,வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சி இடம் பெற்றது.
தேர்த்திருவிழாவிற்கு மறுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமான்,வள்ளி,தெய்வானையுடன் வீதி வழிசென்று சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடிய திருக்காட்சி இடம் பெற்றதுடன்-மறுநாள் 15.08.2015 சனிக்கிழமை அன்று திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்று-வங்களாவடி முருகனின் வருடாந்த பெருந்திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-திருக்கல்யாணத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
வேலணை வங்களாவடி முருகனின் திருக்கல்யாணத் திருவிழாவிற்கான அனுசரணை வழங்கியவர்கள்….
பரிஸில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற….