யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் வருடாந்த,இரண்டாம் தவணைக்கான விடுமுறையுடன், மாணவர்களுக்கு பரிசு வழங்கிய,நிகழ்வு கடந்த வாரம் -பாடசாலையின் அதிபர் என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அதிபர் பத்மநாதன் அவர்களினால்,விடுக்கப்பட்ட -வேண்டுகோளினை ஏற்று -மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்கான நிதி அனுசரணையினை அல்லையூர் இணையம் வழங்கியிருந்தது.
இனித்தொடர்ந்து வரும் காலங்களிலும் மாணவர்களுக்கான ஊக்கப்பரிசினை வழங்க அல்லையூர் இணையம் தீர்மானித்துள்ளது.
இதே போல் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான ஊக்கப்பரிசினை,மாலா அறக்கட்டளையின் ஊடாக -திரு பிரான்ஸிஸ் அமலதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.