யாழ் தீவகம் மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 22.07.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் அம்பாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம் பெற்று-பினனர் முத்துமாரி அம்பாள் வீதியுலா வந்ததுடன்-30.07.2015 வியாழக்கிழமை அன்று காலை அம்பாள் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம் பெற்றது.
மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்பாளைத் தரிசிக்க-உள்ளூரிலிருந்தும்-வெளிநாடுகளிலிருந்தும்-பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்ததாக தெரிய வருகின்றது.
மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்பாளின் வருடாந்த தேர்த்திருவிழாவினை-நேர்த்தியாக,பதிவு செய்து வெளியிடுமாறு-ஊர்பற்று மிக்கவரும்-ஆலயப்பணிகளுக்கு முன்னின்று உதவி வருபவருமாகிய,எமது அன்புக்குரிய திரு சி.ஜெயசிங்கம் (கனடா)அவர்களின் அன்பான வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!