யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-புளியங்கூடல் ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மனின் வருடாந்த பூங்காவனத் திருவிழா அன்று ஆலய முன்றலில் நடைபெற்ற-பிரபல தென் இந்திய கர்நாடக இசை பாடகி திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைக்கச்சேரியினை-தீவகத்தின் பல கிராமங்களிலிருந்து சென்ற மக்கள் கண்டு ரசித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை 29.06.2015 இரவு 7 மணிக்கு ஆரம்பமான -இசைக்கச்சேரியினைக் காண தீவகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் வந்திருந்ததாக மேலும் தெரிய வருகின்றது.
யாழ் தீவகத்தில்-முதல் முறையாக புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மனின் சந்நிதான முன்றலிலேயே தென் இந்திய கர்நாடக பாடகி திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைக் கச்சேரி இடம் பெற்றுள்ளதாக மேலும் பேசப்படுகின்றது.