தீவகத்தில் பிரசித்தி பெற்ற-புளியங்கூடல் இராஜ மகாமாரி அம்மனின் வருடாந்த பூங்காவனத் திருவிழாவில்-பிரபல கர்நாடக இசை பாடகி திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைக்கச்சேரி இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை 28.06.2015 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்-இசைக்கச்சேரியினைக் காண அனைவரும் திரண்டு வருமாறு ஞாயிறு மாலை ஒலிபெருக்கி மூலம் தீவகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் தீவகத்தில்-முதல் முறையாக-தென் இந்திய கர்நாடக பாடகி திருமதி நித்தியஸ்ரீ அவர்களின் இசை நிகழ்ச்சி-இராஜமகாமாரி அம்மனின் சந்நிதான முன்றலிலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.