யாழ் தீவகம் மண்கும்பான் கிழக்குப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் மிகப் பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் ஆலயத்தை, மிகப்பிரமாண்டமாக புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்த செய்தியாகும்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இப்புனரமைப்பு பணிகளுக்கு மேலும் நிதி தேவைப்படுவதனால்-உலகமெல்லாம் பரந்து வாழும் மண்கும்பான் மக்கள் சிவகாமி அம்மனின் இறுதிக் கட்ட திருப்பணிக்கு உதவிட முன் வருமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிறந்த மண்ணை விட்டு தூரதேசத்தில் வாழ்கின்ற போதிலும்-எம் மண்ணில் வாழ்கின்ற எம் உறவுகளின் வழிபாட்டுக்காகவும்-அழிந்து வரும் தர்மநெறிகளினைக் தடுத்து ஒழுக்கமுள்ளவர்களாக-எமது அடுத்த தலைமுறையினர் வாழ ஆலயங்களே வழிகாட்டுகின்றன-அப்படியான ஆலயங்களை புனரமைத்து அழகுபடுத்தி அடுத்த தலைமுறையின் வழிபாட்டுக்கு வழியமைத்துக் கொடுப்பது எமது கடமையல்லவா?சிந்திப்போம்!ஆலய திருப்பணிக்கு உதவிடுவோம் விரைந்து முன் வாருங்கள்!
அனைத்து தொடர்புகளுக்கும்……….
திரு செல்வரத்தினம் கோகிலரூபன் (கோகிலன்)பிரான்ஸ்
தொலைபேசி இலக்கம்-0033651753543
