யாழ் தீவகம் வேலணையில்-பெண்கள் தலைமைத்துவமாகக் கொண்ட-குடும்பங்களுக்கு பிரித்தானியா ஒன்றியத்தால் உதவிகள் வழங்கப்பட்டன !
வேலணை ஒன்றியம் பிரித்தானியா கிளையினால் -வேலணையில் வசிக்கும் பெண்கள் தலைமையேற்று நடத்தும் வறிய குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன .
கடந்த வாரம்-வேலணையில் நடைபெற்ற,இந்நிகழ்வில் பிரித்தானியா ஒன்றியத்தின் வேலணைத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவரும்- சமூகசேவையாளருமாகிய அமரா் இ.சிவநாதன் அவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்-தெரிவு செய்யப்பட்ட-குடும்பங்களுக்கு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.