யாழ் தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள மிகப்பழமையான முருகன் ஆலயத்தினை புனரமைத்து பத்துநாட்கள் அலங்காரத் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த கால யுத்த அனர்த்தங்களினால் மண்கும்பானிலிருந்து வெளியேறிய மக்களில் பலர் மீண்டும் ஊர் திரும்பியதனைத் தொடர்ந்து -புதர்மண்டிக்கிடந்த இவ்வாலயம்-பொதுமக்களினால் அண்மையில் சிரமதானமூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் அலங்காரத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கான ஆயத்தங்களிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதாக மேலும் தெரிய வருகின்றது.
இவ்வாலயத்தினை முழுமையாக புனரமைப்பதற்கும்-வரும் ஆவணி மாதத்தில் பத்துநாட்கள் நடைபெறவுள்ள அலங்காரத்திருவிழாவினை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கும் தேவையான நிதியினை வழங்க முருக பக்தர்கள் விரைந்து முன்வருமாறு அல்லையூர் இணையத்தின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தொடர்புகளுக்கும்
மண்கும்பான் முருகன் ஆலய நிர்வாக சபை
தொலைபேசி இலக்கம்-……0094777362106
தகவல்….
திரு ஜெகதீஸ்வரன்( ஈசன்) லண்டன்
சிறு துளி பெரு வெள்ளம்
இதை உணர்ந்து விரைந்து உதவிடுவீர்…