தீவகம் மண்கும்பானில் அமர்ந்திருந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும்- அருள்மிகு கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில்07.06.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன்-அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் உபயத்தின் பேரிலேயே இவ்விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வுகள் இடம் பெற்றதாக மேலும் தெரிய வருகின்றது.
இவ்வாலயத்தின் பிரதம பூசகராக,மண்கும்பான் அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்ட-அமரர் திருஞானசம்பந்தர் அவர்களின் புதல்வர் திரு ஜெயராசா அவர்களே நீண்டகாலமாக பணியாற்றி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.