மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகக் கொண்டவரும்-இவ்விருகிராம மக்களினால் நன்கு அறியப்பட்டவரும்-சிறந்த மேடைப் பேச்சாளரும்-சமூக ஆர்வலருமாகிய,அமரர் புண்ணியமூர்த்தி அவர்களின் அன்புப்பேத்தியும்-அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்-அறப்பணிச்சேவைக்கும் முன்னின்று பெரிதும் உதவி வருபவருமாகிய,திரு வி.குருபவராசா -யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வி அலர்நிலா தனது 7வது பிறந்தநாளினை,03.06.2015 புதன்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இல்லத்தில் மிக எளிமையாகக் கொண்டாடினார்.
அலர்நிலாவை,அவரது பெற்றோர்கள்-உறவினர்களுடன் இணைந்து-எல்லாச் செல்வங்களும் பெற்று-கல்வியில் சிறந்து விளங்கிட-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் துணைபுரிய வேண்டும் என்று வேண்டி அல்லையூர் இணையத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.