இந்து மகா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் ஈழவள நாட்டின் வடபால் சைவமும்,தமிழும் தழைத்தோங்கும் தீவகத்தின் வேலணை மேற்கூரில்-அழகான மருதநிலம் சூழ்ந்த,பெரியபுலம் என்னும் திவ்விய ஷேத்திரத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரியும்-எல்லாம் வல்ல கணபதிப்பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 23.05.2015 சனிக்கிழமை அன்று கொடியே்ற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-01.06.2015 திங்கட்கிழமை அன்று கணபதிப்பிள்ளையார் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம் பெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
நிழற்படப்பதிவு-திரு I.சிவநேசன் -வேலணை
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்.