அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தினை புனரமைத்து -மக்களின் வழிபாட்டிற்கு வழி செய்து கொடுப்பதற்காகவும்-மிகப் பழைமையான இவ்வாலயத்தினை அழிய விடாமல் பாதுகாப்பதற்காகவும்-அல்லைப்பிட்டி மக்களுடன் இணைந்து அல்லையூர் இணையம் மேற் கொண்ட விடாமுயற்சியின் பயனாக-தற்போது ஆலயப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்-ஆலயத்திற்கான சுற்றுமதில் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
பல இலட்சம் ரூபாக்கள் செலவில் ஆலய சுற்றுமதிலினை திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் அமைத்துத் தந்துள்ளார்.
திரு எஸ்.ஆர் அவர்கள் அறப்பணிக்கும்,ஆலயப்பணிகளுக்கும் தொடர்ந்து உதவிவருவதுடன்-ஊர் மக்களுக்கும் உதவிகளைச் செய்து வருபவர் என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அல்லையூர் இணையத்தினால் இதுவரை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபாக்கள் திரட்டப்பட்டு-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் ஆலய நிர்வாகத்தின் பொருளாளரிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியினை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோள்
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் அல்லைப்பிட்டி மக்கள்-சிந்தாமணிப் பிள்ளையாரின் ஆலய புனரமைப்புக்கும்-எதிர்வரும் ஆவணி மாதமளவில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கும் உதவிட முன்வருமாறு உரிமையோடு அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.