வெகுவிரைவில் குடமுழுக்கு காண இருக்கும்-யாழ் தீவகத்தின் தலைத்தீவில் கோவில் கொண்டு-அடியவரைக் காத்தருளி அருள்பாலித்து வரும்-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் -சித்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணை கொண்டு மிகவும் சிறப்பாக முறையில் நடைபெற்று வருகின்றது.
தற்பொழுது ஐந்தாம் தள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து- பண்டிகை கலசங்கள் வைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எம் பெருமானின் பணிகள் முழுமைபெற…..
சிற்ப வேலைப்பாடுகள்…
பொம்மைகள் அமைத்தல்…
வர்ணம் பூசுதல்…
ஆகிய வேலைப்பாடுகள் இருப்பதனால்….
எம் பெருமான் மெய்யடியார்கள் இப் பெருங் கைங்கரியத்தில் விரைந்து இணைந்து சித்திவிநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.