மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 2ம் ஆண்டுத் திதி 29-04-2015 புதன்கிழமை அன்று-லண்டனில் அமைந்துள்ள அன்னாரின் புதல்வர் திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
அன்றைய தினம் அல்லையூர் இணையத்தின் ஒழுங்கு படுத்தலில்-அன்னாரின் புதல்வர்களின் நிதியுதவியுடன் யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள சைவச் சிறுவர்கள் இல்லத்தில் பிரார்த்தனை நிகழ்வுடன் மதிய சிறப்பு உணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்கள் வசிக்கும் இல்லத்திற்கு தேவையான 3அலுமாரிகள்,ஒரு பான்( காற்றாடி) என்பனவும் வழங்கி வழங்கப்பட்டன.
அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அறப்பணிக்காக 50 ஆயிரம் ரூபாக்களை அல்லையூர் இணையத்திடம் நம்பிக்கை வைத்து வழங்கிய,அன்னாரின் புதல்வர்களுக்கு-சைவச்சிறுவர் இல்லம் சார்பிலும்,கைதடி விழிப்புலன் இழந்தோர் இல்லம் சார்பிலும்,நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.