தீவகம் புங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) ஆலயத்தின் வருடாந்த,மகோற்சவம் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.வரும் 02-05-2015 சனிக்கிழமை அன்று காலை தேர்த்திருவிழாவும்,மறுநாள் 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணகை அம்மனின் கப்பல் திருவிழா 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது-நயினை அபிராமி வீடியோ பதிவாளர்களினால் முழுமையாக பதிவு செய்யப்பட்ட திருவிழாவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.