யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று – 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று-வருடாந்த மகோற்சவம் நிறைவடைந்தது.
அல்லையூர் இணையத்தினால் 15-04-2015 புதன்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
இத்திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியவர்-லண்டனில் வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த,திரு.நல்லநாதசிவம் கேதீஸ்வரன் குடும்பத்தினர்-அவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.