யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் புதன்கிழமை தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால் 13-04-2015 திங்கட்கிழமை அன்று மாலை பதிவு செய்யப்பட்ட- சப்பறத்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
சப்பறத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிவர்கள்-
மண்கும்பானைச் சேர்ந்த,பிரான்ஸில் வசிக்கும் திரு பேரம்பலம் பாலசுந்தரம் குடும்பத்தினர்-அவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.
நிழற்படங்கள்-திரு.I.சிவநேசன்.வேலணை