யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால் 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-5ம் நாள் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.
புலம்பெயர்ந்து வாழும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களின் வேண்டுகோளின் பேரிலும்- அனுசரணையிலும்,09-04-2015 வியாழக்கிழமை முதல் தீர்த்தத் திருவிழா வரை- வீடியோப் பதிவுகளாக,நிழற்படங்களாக,அல்லையூர் இணையத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணைகொண்டு செய்யப்பட்டுள்ளன-என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.
அனுசரணை வழங்கியவர்
லண்டனில் புகழ் பெற்ற-SAGHANA JEWELLERS நகை மாடம் மற்றும் Anglo asian group நிறுவனம் ஆகியவற்றின் மண்கும்பானைச் சேர்ந்த, உரிமையாளர் திரு கணேசலிங்கம் தயா அவர்கள்-இத்திருவிழாவின் நிழற்படங்கள் மற்றும் வீடியோப் பதிவிற்கான அனுசரணையினை வழங்கியிருந்தார்.அவருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்- மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.