அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க.த.க வித்தியாலயத்தி்ல் கடந்த 18.03.2015 புதன்கிழமை அன்று அங்குரார்ப்பண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் மூன்றாவது பாண்ட் அணியினரின் அறிமுகம்-மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல்-பாடசாலைக்கான கீதம் வெளியிடுதல்,ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பற்றிய விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலைக்கான கீதம்-கலாநிதி பண்டிதர் திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால் இயற்றப்பட்டு-மெட்டமைத்து மாணவர்களிளால் பாடி வெளியிடப்பட்டது-சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.
அதிபர் திரு V.N. பத்மநாதன் அவர்களுக்கு-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.