தீவகம் வேலணை பள்ளம்புலத்தில் அமைந்துள்ள,முருகமூர்த்தி சனசமூக நிலையத்தினால் கடந்த 05-03-2015 வியாழக்கிழமை அன்று விழா ஒன்று நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் சிறப்பு நிகழ்வாக, இப்பகுதியில் சமூகப்பணியாற்றி இறைவனடி சேர்ந்த,இரு அமரர்களின் நிழற்படங்கள் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதாகவும்-மேலும் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த,மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கி கைளரவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கு,வேலணை மத்திய கல்லூரி அதிபர் மற்றும் வேலணை பிரதேசசபை தவிசாளர் உட்பட-சமூக ஆர்வலர்கள்-சனசமூக நிலைய உறுப்பினர்கள்-பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.