அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இரு பாடசாலைகளான, பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகியவற்றில் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் ஊடாகவே இத்தொட்டிகள் அமைக்கப் பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இத்தொட்டியில் மழைகாலத்தில் சேமிக்கப்படும் நீர் பின்னர் மாணவர்களின் தேவைக்குப் பயன்படுத்த முடியும் என்றும் மழை இல்லாத காலங்களில் கிணற்றிலிருந்து மோட்டரின் உதவியுடன் தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு மாணவர்களின் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் ஏற்கனவே மோட்டர் பொருத்தப்பட்டு மாணவர்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பராசக்தி வித்தியாலயத்தில் இன்னும் மோட்டர் பொருத்தப்படவில்லை என்று அறியமுடிகின்றது.