அல்லைப்பிட்டி விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட புகையிலைச் செய்கை-இம்முறை அதிக விளைச்சலைத் தந்திருப்பதாக விவசாயி ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
கடந்த பல வருடங்களை விட இம்முறை விவசாயிகளுக்கு புகையிலையினால் பெரும் லாபம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுவதுடன்.அல்லைப்பிட்டியில் பல காரணங்களினால் விவசாயம் செய்பவர்களின் தொகை குறைவடைந்து வருகின்ற நிலையில்-இந்த வருடம் புகையிலையின் அமோக விளைச்சலைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மேலும் பல விவசாயிகளை,விவசாயத்தில் ஈடுபடத்தூண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது புகையிலையினை பதனிடுவதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.