யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவக பிரதான வீதியினை- அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும் பணிகள் தற்போது மெதுவாக ஆனால் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.
அதி உயர் தொழில் நுட்பத்துடன் கனரக இயந்திரங்களின் துணையுடன் வீதி அகலப்படுத்தப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இவ்வீதி அகலப்படுத்தும் பணிகள் நிறைவடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்-முழுமையாக பணிகள் நிறைவடைய நீண்டகாலம் செல்லலாம் என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது யாழ் பண்ணையிலிருந்து-அல்லைப்பிட்டி சந்தி வரை காபட் போடப்பட்டுள்ள போதிலும்,வீதியின் இருபக்க வழிப்பாதைகளும் முழுமையாக காபட் போடப்படவில்லையென்றும்-இலந்தையடியிலிருந்து அல்லைப்பிட்டிச் சந்திவரை மட்டுமே முழுமையாக காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.